மணிப்பூர் கலவர வழக்கு: அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றம்!
Jan 14, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூர் கலவர வழக்கு: அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக, மணிப்பூர் கலவர வழக்கை, அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி மற்றும் மெயிட்டி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது, கடந்த மே மாதம் 3-ம் தேதி கலவரமாக வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.யும், மாநில போலீஸாரும் விசாரித்து வந்தனர். இந்த சூழலில், மணிப்பூர் வழக்குகளைக் கண்காணிக்கவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்பார்வையிடவும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளையும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், கலவரம் தொடர்பான 17 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட வழக்குகளை விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்குமாறு குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு நியாயமான வழக்கு விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்திருக்கிறது. மேலும், வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளைச் சிறையிலடைக்க உத்தரவிடுதல், காவலை நீட்டித்து உத்தரவிடுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இவ்வழக்கு விசாராணைக்கென நிர்ணயிக்கப்படும் குவாஹாட்டி நீதிமன்றத்தில் இணையவழியில் (ஆன்லைன்) மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மணிப்பூரில் இருந்தபடியே மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சி.பி.ஐ. வழக்குகளுக்கு தொடர்புடைய பிற நபர்கள், இணையவழியில் வழக்கு விசாரணையில் பங்கேற்க விரும்பாவிட்டால், குவாஹாட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகலாம். இந்த இணையவழி விசாரணைக்குத் தேவையான இணைய சேவைகளை மணிப்பூர் மாநில அரசு செய்துதரவேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.

Tags: manipur issue
ShareTweetSendShare
Previous Post

மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

தமிழக பா.ஜ.கவில் 1008 புதிய பூத் கமிட்டிகள்- கொடியேற்றிவைத்த அண்ணாமலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies