மணிப்பூர் கலவர வழக்கு: அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றம்!
Oct 4, 2025, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூர் கலவர வழக்கு: அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக, மணிப்பூர் கலவர வழக்கை, அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி மற்றும் மெயிட்டி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது, கடந்த மே மாதம் 3-ம் தேதி கலவரமாக வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.யும், மாநில போலீஸாரும் விசாரித்து வந்தனர். இந்த சூழலில், மணிப்பூர் வழக்குகளைக் கண்காணிக்கவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்பார்வையிடவும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளையும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், கலவரம் தொடர்பான 17 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட வழக்குகளை விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்குமாறு குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு நியாயமான வழக்கு விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்திருக்கிறது. மேலும், வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளைச் சிறையிலடைக்க உத்தரவிடுதல், காவலை நீட்டித்து உத்தரவிடுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இவ்வழக்கு விசாராணைக்கென நிர்ணயிக்கப்படும் குவாஹாட்டி நீதிமன்றத்தில் இணையவழியில் (ஆன்லைன்) மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மணிப்பூரில் இருந்தபடியே மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சி.பி.ஐ. வழக்குகளுக்கு தொடர்புடைய பிற நபர்கள், இணையவழியில் வழக்கு விசாரணையில் பங்கேற்க விரும்பாவிட்டால், குவாஹாட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகலாம். இந்த இணையவழி விசாரணைக்குத் தேவையான இணைய சேவைகளை மணிப்பூர் மாநில அரசு செய்துதரவேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.

Tags: manipur issue
ShareTweetSendShare
Previous Post

மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

தமிழக பா.ஜ.கவில் 1008 புதிய பூத் கமிட்டிகள்- கொடியேற்றிவைத்த அண்ணாமலை!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies