தேசிய நல்லாசிரியர் விருது: ஆளுநர்கள் வாழ்த்து!
Oct 18, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது: ஆளுநர்கள் வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 28, 2023, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் அன்றைக்குத் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆளுநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறையில் அசாதாரண முயற்சி & பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது 2023-க்கு தேர்வான திருமதி எஸ்.மாலதி, அரசு மேல்நிலை பள்ளி, #வீரகேரளம்புதூர், டாக்டர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, #அலங்காநல்லூர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 27, 2023

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் பதிவில்,
“கல்வித் துறையில் அசாதாரண முயற்சி மற்றும் பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது 2023-க்கு தேர்வான  எஸ்.மாலதி, அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகேரளம்புதூர், டாக்டர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய #நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி… pic.twitter.com/JFVkix7rC8

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 27, 2023

 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் பதிவில்,
“சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம் கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை திருமதி. மாலதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

Tags: governor ravinational award
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3 வெற்றி பெண் சக்திக்கான உயிர்ப்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

அட்டாக் சிறையில் இம்ரான் கானிடம் எஃப்.ஐ.ஏ. விசாரணை!

Related News

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies