பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!
Sep 19, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மின்சாரக் காரைப் பரிசாக வழங்கப்போவதாக, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அறிவித்திருக்கிறார்.

Web Desk by Web Desk
Aug 28, 2023, 09:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை செஸ் போட்டி, அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், இளவயது செஸ் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 2-ம் இடம் பெற்றார்.

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டின் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் இறுதிப்போட்டியில் மோதினர்.

இதில், முதல் 2 சுற்றுப் போட்டிகளும் சமனில் முடிந்தன. எனவே, டை பிரேக்கர் சுற்று நடந்தது. இதில், முதற்சுற்று போட்டியில் கார்ல்சன் வெற்றிபெற, 2-வது சுற்று டிராவில் முடிந்தது. இந்த சூழலில், 3-வது சுற்றுப் போட்டியிலும் கார்ல்சன் வெற்றிபெற்றார். 

இதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் 2-ம் இடம் பெற்றார். அதேசமயம், அடுத்தாண்டு ஏப்ரல் 2 முதல் 25-ம் தேதி வரை கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவிருக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதிப் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில்தான், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சாரக் காரைப் பரிசளிக்கப்போவதாக பிரபல தொழிலதிபர் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மஹிந்திரா தார் காரைப்  பரிசளிக்க வேண்டும் என கோருகிறார்கள். அவர்களது உணர்வு எனக்குப் புரிகிறது. ஆனால், என்னிடம் மற்றொரு யோசனை உள்ளது.

Appreciate your sentiment, Krishlay, & many, like you, have been urging me to gift a Thar to @rpragchess
But I have another idea …
I would like to encourage parents to introduce their children to Chess & support them as they pursue this cerebral game (despite the surge in… https://t.co/oYeDeRNhyh pic.twitter.com/IlFIcqJIjm

— anand mahindra (@anandmahindra) August 28, 2023

வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டைத் தொடர  ஊக்கப்படுத்துவதை விரும்புகிறேன்.

இது மின்சாரக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும், சிறந்த எதிர்காலத்திற்குமான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி. காரைப் பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிரக்ஞானந்தாவின் பெற்றோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் இரமேஷ்பாபு நாகலட்சுமி  ஆகியோர் நம் நன்றிக்கு உரியவர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: chessPragyananda ChessChess Champion
ShareTweetSendShare
Previous Post

ஓணம் பண்டிகை!

Next Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Related News

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies