பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!
Apr 28, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மின்சாரக் காரைப் பரிசாக வழங்கப்போவதாக, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அறிவித்திருக்கிறார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 09:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை செஸ் போட்டி, அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், இளவயது செஸ் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 2-ம் இடம் பெற்றார்.

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டின் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் இறுதிப்போட்டியில் மோதினர்.

இதில், முதல் 2 சுற்றுப் போட்டிகளும் சமனில் முடிந்தன. எனவே, டை பிரேக்கர் சுற்று நடந்தது. இதில், முதற்சுற்று போட்டியில் கார்ல்சன் வெற்றிபெற, 2-வது சுற்று டிராவில் முடிந்தது. இந்த சூழலில், 3-வது சுற்றுப் போட்டியிலும் கார்ல்சன் வெற்றிபெற்றார். 

இதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் 2-ம் இடம் பெற்றார். அதேசமயம், அடுத்தாண்டு ஏப்ரல் 2 முதல் 25-ம் தேதி வரை கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவிருக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதிப் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில்தான், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சாரக் காரைப் பரிசளிக்கப்போவதாக பிரபல தொழிலதிபர் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மஹிந்திரா தார் காரைப்  பரிசளிக்க வேண்டும் என கோருகிறார்கள். அவர்களது உணர்வு எனக்குப் புரிகிறது. ஆனால், என்னிடம் மற்றொரு யோசனை உள்ளது.

Appreciate your sentiment, Krishlay, & many, like you, have been urging me to gift a Thar to @rpragchess
But I have another idea …
I would like to encourage parents to introduce their children to Chess & support them as they pursue this cerebral game (despite the surge in… https://t.co/oYeDeRNhyh pic.twitter.com/IlFIcqJIjm

— anand mahindra (@anandmahindra) August 28, 2023

வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டைத் தொடர  ஊக்கப்படுத்துவதை விரும்புகிறேன்.

இது மின்சாரக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும், சிறந்த எதிர்காலத்திற்குமான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி. காரைப் பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிரக்ஞானந்தாவின் பெற்றோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் இரமேஷ்பாபு நாகலட்சுமி  ஆகியோர் நம் நன்றிக்கு உரியவர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: chessPragyananda ChessChess Champion
ShareTweetSendShare
Previous Post

ஓணம் பண்டிகை!

Next Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Related News

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies