அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா அத்துமீறி உள்ளது.

இந்தியா – சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டு யுத்தத்தின்போது கணிசமானப் பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அப்பகுதிக்கு அக்ஷாய் சின் என்று பெயர் சூட்டியது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசம் தங்களது நிலப்பகுதி என்றும், அது தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதன் பிறகும், அண்டை நாடானா சீனா, நமது நாட்டின் எல்லையில் அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறு நுழைந்து நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், லடாக் எல்லையில் நமது இராணுவம் கூடுதல் படைகளை குவித்திருக்கிறது.

இதையடுத்து, இரு நாட்டு நல்லுறவு குறித்து சீனாவிடம் இந்திய தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபரிடம் ஜி ஜின் பிங்கிடம் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், சீனா அடங்குவதாக இல்லை. இந்த நிலையில்தான், சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த வரைபடத்தில், சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்ஷாய் சின் என்றும், அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில், இந்திய நிலப்பகுதி மட்டுமல்லாது தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் சீனா தங்களுடைய பகுதி என்று உரிமை கோரி இருக்கிறது. மேலும், சீனா தென் சீனக் கடலில் பெரும் பகுதியை தனது நிலம் என்று கூறியிருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோல ஒரு வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதிலும், அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுடைய நிலம் என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதை தங்களது நாட்டு மக்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளை தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதற்கு மேற்கண்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiachina
ShareTweetSendShare
Previous Post

என்.டி.இராமாராராவ் நூற்றாண்டு! – நினைவு நாணயம் வெளியீடு!

Next Post

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies