ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!
Oct 2, 2025, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!

Web Desk by Web Desk
Aug 29, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனம் 370-வது பிரிவு மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்தால் அம்மாநிலத்தில் தீவிரவாதம்  தலைவிரித்தாடியது. இதை முடிவுக்குக் கொண்டுவர பா.ஜ.க. தலைமையாலான மத்திய  அரசு முடிவு செய்தது.

எனவே, 2-வது முறையாக 2019-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அடங்கிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத  யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசனத்தின் முகப்புரையான சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான். மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370-வது பிரிவு தடையாக இருந்தது. தற்போது 370-வது ரத்துக்குப் பிறகுதான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.அதோடு, ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான். எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது” என்று வாதிட்டார். அதோடு, 1964-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்கக் கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டதையும் சுட்டிக்காட்டினார்.

 

Tags: supreme court chief justice chandrachudsupreme courtjammukashmir
ShareTweetSendShare
Previous Post

தவறான தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா அறிவிப்பு! – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

Next Post

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies