ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனம் 370-வது பிரிவு மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்தால் அம்மாநிலத்தில் தீவிரவாதம்  தலைவிரித்தாடியது. இதை முடிவுக்குக் கொண்டுவர பா.ஜ.க. தலைமையாலான மத்திய  அரசு முடிவு செய்தது.

எனவே, 2-வது முறையாக 2019-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அடங்கிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத  யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசனத்தின் முகப்புரையான சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான். மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370-வது பிரிவு தடையாக இருந்தது. தற்போது 370-வது ரத்துக்குப் பிறகுதான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.அதோடு, ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான். எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது” என்று வாதிட்டார். அதோடு, 1964-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்கக் கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டதையும் சுட்டிக்காட்டினார்.

 

Tags: supreme court chief justice chandrachudsupreme courtjammukashmir
ShareTweetSendShare
Previous Post

தவறான தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா அறிவிப்பு! – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

Next Post

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies