லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.
Oct 3, 2025, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.

லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒரு அவமானமானகரமான நிகழ்வு என்று இங்கிலாந்தின் வணிக மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் கெமி படேனோக் தெரிவித்திருக்கிறார்.

Web Desk by Web Desk
Aug 30, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த மார்ச் 19-ம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, சுமார் 50 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது,  ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியோடு, தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதித்தனர். இத்தாக்குதலை நடத்தியது இங்கிலாந்தைச் சேர்ந்த குர்சரண் சிங், தல் கல்சா, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அவதார் சிங் காந்தா, ஜஸ்விர் சிங் உள்ளிட்டோர் என்பது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்தது.

இத்தாக்குதலுக்குத்தான் இங்கிலாந்தின் வணிக மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் கெமி படேனோக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த நாடாக இருந்தாலும், உலக வல்லரசாக இருந்தாலும், எப்போதும் இது போலப் பிரச்சினைகள் இருக்கும். இங்கிலாந்து நாட்டின் குடிமகனில் ஒருவராக நான் இதைச் சொல்கிறேன். பல நேரங்களில், நாம் விரும்பும் பாதையில் மக்கள் ஒருங்கிணைய மாட்டார்கள். லண்டனில் நிகழ்ந்த இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் தூதரகத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்தது மட்டுமின்றி, அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பியிருப்பதோடு, சர்வதேச தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நான் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. இங்கிலாந்து அரசின் சார்பாகப் பேசுகிறேன். இத்தாக்குதல் மிகப் பெரிய அவமானம் . பன்முகத் தன்மை மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட தேசம் இங்கிலாந்து என்று பெருமை கொள்கிறது. ஆனால், தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் பிரிவினைவாதத் தாக்குதல்களின்போது வரக்கூடிய சவால்களை இது போன்ற சம்பவம் நினைவூட்டுகிறது. உலகில் அமைதி நிலவப் பாடுபடும் இங்கிலாந்தில், இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் இணக்கமாக வாழும் சூழ்நிலைக்கு ஏற்படும் சவால்களுக்கு சான்றாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசும், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதை இங்கிலாந்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி மற்றும் இந்திய அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தி இருந்தது.

Tags: London
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!

Next Post

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சத்தீஸ்கர் பயணம்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies