லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.
Jul 28, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.

லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒரு அவமானமானகரமான நிகழ்வு என்று இங்கிலாந்தின் வணிக மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் கெமி படேனோக் தெரிவித்திருக்கிறார்.

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த மார்ச் 19-ம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, சுமார் 50 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது,  ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியோடு, தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதித்தனர். இத்தாக்குதலை நடத்தியது இங்கிலாந்தைச் சேர்ந்த குர்சரண் சிங், தல் கல்சா, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அவதார் சிங் காந்தா, ஜஸ்விர் சிங் உள்ளிட்டோர் என்பது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்தது.

இத்தாக்குதலுக்குத்தான் இங்கிலாந்தின் வணிக மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் கெமி படேனோக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த நாடாக இருந்தாலும், உலக வல்லரசாக இருந்தாலும், எப்போதும் இது போலப் பிரச்சினைகள் இருக்கும். இங்கிலாந்து நாட்டின் குடிமகனில் ஒருவராக நான் இதைச் சொல்கிறேன். பல நேரங்களில், நாம் விரும்பும் பாதையில் மக்கள் ஒருங்கிணைய மாட்டார்கள். லண்டனில் நிகழ்ந்த இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் தூதரகத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்தது மட்டுமின்றி, அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பியிருப்பதோடு, சர்வதேச தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நான் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. இங்கிலாந்து அரசின் சார்பாகப் பேசுகிறேன். இத்தாக்குதல் மிகப் பெரிய அவமானம் . பன்முகத் தன்மை மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட தேசம் இங்கிலாந்து என்று பெருமை கொள்கிறது. ஆனால், தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் பிரிவினைவாதத் தாக்குதல்களின்போது வரக்கூடிய சவால்களை இது போன்ற சம்பவம் நினைவூட்டுகிறது. உலகில் அமைதி நிலவப் பாடுபடும் இங்கிலாந்தில், இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் இணக்கமாக வாழும் சூழ்நிலைக்கு ஏற்படும் சவால்களுக்கு சான்றாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசும், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதை இங்கிலாந்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி மற்றும் இந்திய அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தி இருந்தது.

Tags: London
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!

Next Post

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சத்தீஸ்கர் பயணம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies