லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி - ரூ.3.50 லட்சம் பறிமுதல்
Jul 3, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Web Desk by Web Desk
Sep 1, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப்  பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில்  உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதா (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, லஞ்ச பணத்தை, நேரடியாக வாங்கினால், சிக்கிக் கொள்வோம் என டிஜிட்டல் முறையில், அதாவது, ஜி பே, போன் பே மூலமாக மட்டுமே வாங்குவது வழக்கம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே, நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வாராம். இது தொடர்பான புகார், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால், அவரைப்  பிடிக்க பொறிவைத்தனர்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்  தேவநாதன் தலைமையில் ஆய்வாளாகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர், விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளே நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திய போது, உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் மனைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தாரிடம் இருந்து, சங்கீதா லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, காவல்துறையினர், உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர் உதயகுமார் (வயது 37) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: viruthachalam policepolicesub registerdavcanti corruption
ShareTweetSendShare
Previous Post

சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன்!

Next Post

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பொதுமக்கள் போராட்டம்!

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies