இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. து.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் சேவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

1857-ம் ஆண்டு நடைபெற்ற, முதல் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட, மங்கள் பாண்டே என்ற வீரனுக்கு முன்பாகவே, தர்மத்தை நிலைநாட்ட ராஜ ராஜசோழன் பிறந்த மண்ணிலிருந்து தோன்றிய ஹிந்து வீரன்தான் நமது பூலித்தேவன்.

மகாதேவர் சிவபெருமானின் தீவிர பக்தனான இவர், தனது பெயருக்கேற்றார் போலவே வீரத்துடன் விளங்கினார். தனது ஒப்பற்ற போர் திறமையினாலும், அரசியல் அறிவினாலும், தன்னுள் கொழுந்து விட்டு எறிந்த வீரத்தினாலும், பூலித்தேவன் பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரனாக விளங்கினார். அதேசமயம், அசட்டுத்தனமான புரட்சி வீரனாக இல்லாமல், அதர்மத்தை எதிர்த்து லட்சிய நோக்கு கொண்ட புரட்சி வீரனாக விளங்கினார்.

1715-ம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், தனது 18 வது வயதிலேயே 150 கிராமங்களின் தலைவனாக, குறுநில மன்னனாக தலைமையேற்றார். 1759-ல், ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால், தென்னகப் பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஆங்கிலேயனின் பிரதிநிதியான கான்சாகிப் என்பவன், பூலித்தேவனிடம் இருந்து விளைச்சலில் ஒரு பகுதி நெல்லை வரியாகக் கேட்டு வந்தான். ஆனால், “வரி கொடேன்” என்று பூலித்தேவன் மறுத்ததால், இப்பகுதியானது இன்றும் நெற்கட்டான் சேவல் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர் பூலித்தேவன். இறுதியாக, 1767-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோல்வியுற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், பூலித்தேவன் சங்கரன்கோயில் உள்ளே அமைந்திருக்கக் கூடிய அவரது வழிபாடு தெய்வமான சிவபெருமானின் லிங்கத்திருமேனியோடு இரண்டற கலந்து விட்டார்.

ஆங்கிலேயருக்கு அடி பணிந்து போகாத பூலித்தேவனின் அரசியல் சாதுரியம், இன்று வரை பெருமிதத்தோடு பேசப்படுகிறது. இன்றளவும் பூலித்தேவன் ஒரு சரித்திர நாயகனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவரது 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

Tags: poolith thevanfreedom fighter
Share
Tweet
SendShare
Previous Post

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Next Post

நீட் தேர்வில் 401 மதிப்பெண் பெற்ற மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies