இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.
Jul 3, 2025, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. து.

Web Desk by Web Desk
Sep 1, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் சேவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

1857-ம் ஆண்டு நடைபெற்ற, முதல் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட, மங்கள் பாண்டே என்ற வீரனுக்கு முன்பாகவே, தர்மத்தை நிலைநாட்ட ராஜ ராஜசோழன் பிறந்த மண்ணிலிருந்து தோன்றிய ஹிந்து வீரன்தான் நமது பூலித்தேவன்.

மகாதேவர் சிவபெருமானின் தீவிர பக்தனான இவர், தனது பெயருக்கேற்றார் போலவே வீரத்துடன் விளங்கினார். தனது ஒப்பற்ற போர் திறமையினாலும், அரசியல் அறிவினாலும், தன்னுள் கொழுந்து விட்டு எறிந்த வீரத்தினாலும், பூலித்தேவன் பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரனாக விளங்கினார். அதேசமயம், அசட்டுத்தனமான புரட்சி வீரனாக இல்லாமல், அதர்மத்தை எதிர்த்து லட்சிய நோக்கு கொண்ட புரட்சி வீரனாக விளங்கினார்.

1715-ம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், தனது 18 வது வயதிலேயே 150 கிராமங்களின் தலைவனாக, குறுநில மன்னனாக தலைமையேற்றார். 1759-ல், ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால், தென்னகப் பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஆங்கிலேயனின் பிரதிநிதியான கான்சாகிப் என்பவன், பூலித்தேவனிடம் இருந்து விளைச்சலில் ஒரு பகுதி நெல்லை வரியாகக் கேட்டு வந்தான். ஆனால், “வரி கொடேன்” என்று பூலித்தேவன் மறுத்ததால், இப்பகுதியானது இன்றும் நெற்கட்டான் சேவல் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர் பூலித்தேவன். இறுதியாக, 1767-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோல்வியுற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், பூலித்தேவன் சங்கரன்கோயில் உள்ளே அமைந்திருக்கக் கூடிய அவரது வழிபாடு தெய்வமான சிவபெருமானின் லிங்கத்திருமேனியோடு இரண்டற கலந்து விட்டார்.

ஆங்கிலேயருக்கு அடி பணிந்து போகாத பூலித்தேவனின் அரசியல் சாதுரியம், இன்று வரை பெருமிதத்தோடு பேசப்படுகிறது. இன்றளவும் பூலித்தேவன் ஒரு சரித்திர நாயகனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவரது 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

Tags: freedom fighterpoolith thevan
ShareTweetSendShare
Previous Post

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Next Post

நீட் தேர்வில் 401 மதிப்பெண் பெற்ற மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி!

Related News

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies