இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.
Aug 21, 2025, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. து.

Web Desk by Web Desk
Sep 1, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் சேவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

1857-ம் ஆண்டு நடைபெற்ற, முதல் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட, மங்கள் பாண்டே என்ற வீரனுக்கு முன்பாகவே, தர்மத்தை நிலைநாட்ட ராஜ ராஜசோழன் பிறந்த மண்ணிலிருந்து தோன்றிய ஹிந்து வீரன்தான் நமது பூலித்தேவன்.

மகாதேவர் சிவபெருமானின் தீவிர பக்தனான இவர், தனது பெயருக்கேற்றார் போலவே வீரத்துடன் விளங்கினார். தனது ஒப்பற்ற போர் திறமையினாலும், அரசியல் அறிவினாலும், தன்னுள் கொழுந்து விட்டு எறிந்த வீரத்தினாலும், பூலித்தேவன் பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரனாக விளங்கினார். அதேசமயம், அசட்டுத்தனமான புரட்சி வீரனாக இல்லாமல், அதர்மத்தை எதிர்த்து லட்சிய நோக்கு கொண்ட புரட்சி வீரனாக விளங்கினார்.

1715-ம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், தனது 18 வது வயதிலேயே 150 கிராமங்களின் தலைவனாக, குறுநில மன்னனாக தலைமையேற்றார். 1759-ல், ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால், தென்னகப் பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஆங்கிலேயனின் பிரதிநிதியான கான்சாகிப் என்பவன், பூலித்தேவனிடம் இருந்து விளைச்சலில் ஒரு பகுதி நெல்லை வரியாகக் கேட்டு வந்தான். ஆனால், “வரி கொடேன்” என்று பூலித்தேவன் மறுத்ததால், இப்பகுதியானது இன்றும் நெற்கட்டான் சேவல் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர் பூலித்தேவன். இறுதியாக, 1767-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோல்வியுற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், பூலித்தேவன் சங்கரன்கோயில் உள்ளே அமைந்திருக்கக் கூடிய அவரது வழிபாடு தெய்வமான சிவபெருமானின் லிங்கத்திருமேனியோடு இரண்டற கலந்து விட்டார்.

ஆங்கிலேயருக்கு அடி பணிந்து போகாத பூலித்தேவனின் அரசியல் சாதுரியம், இன்று வரை பெருமிதத்தோடு பேசப்படுகிறது. இன்றளவும் பூலித்தேவன் ஒரு சரித்திர நாயகனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவரது 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

Tags: poolith thevanfreedom fighter
ShareTweetSendShare
Previous Post

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Next Post

நீட் தேர்வில் 401 மதிப்பெண் பெற்ற மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி!

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies