மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பஞ்சாப் மாநிலம் பாக்ராவிற்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு பாஜகவினர் மாலை அணித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளம், தாளம் முழுங்க நடைபெற்ற ஆட்டம், பாட்டத்தில் பாஜக நிர்வாகிகளுடன், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் கலந்து கொண்டு நடம் ஆடினார்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தேர்தலுக்காக ஒவ்வொரு வருடமும் அதிக நேரம் செலவு செய்யப்படுகிறது.
தேர்தலின் போது, தேர்தலை நடத்துவதற்கு அரசு பல கோடி ரூபாயைச் செலவு செய்கிறது. அதே போல, அரசியல்வாதிகளும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கு தேவையில்லாத சுமை ஏற்படுகிறது.
இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. இது தேசத்தின் நலனுக்கான செயல். இதில் மாற்றக் கருத்துக்கள் இருந்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம்.
இது குறித்து, எதிர்க்கட்சிகள் தங்களது கருத்தை தாராளமாகத் மத்திய அரசிடம் தெரிவிக்கலாம். எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பாஜக எப்போதும் மதிப்பு அளித்து வருகிறது என்றார்.