ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாகுமா ?
Jul 29, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாகுமா ?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் இந்தப் போட்டிகள் மீது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தியா பாகிஸ்தான் போன்ற அணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

ஆனால் இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி பாதியிலே ரத்தானது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. போட்டி நடைபெறும் கொழும்பு மற்றும் கண்டியில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்துக்கு நடைபெறும் அனைத்து போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்து போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஜெய்ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. தம்புலாவில் தற்போது மழை இல்லை என்பதால் அங்கு போட்டி நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய ஹோட்டல் வசதிகள் இல்லாததால் இந்திய வீரர்களுக்குப்  பிரச்சனையாக இருக்கும் என புகார் எழுந்துள்ளது.

மேலும் ஹம்பன் தோட்டாவில் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டது.ஆனால் அது காட்டுக்கு நடுவில் இருப்பதால் ஹோட்டலுக்கும் கிரிக்கெட் மைதானத்துக்கும் நீண்ட தூரம் இருக்கும் என்று புகார் எழுந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முழித்து வருகிறது. இதனால் பல இரசிகர்களும் போட்டியை பாகிஸ்தானில் நடத்தி இருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போட்டிகளை இலங்கையிலிருந்து இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்ற முடியுமா என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் யோசித்து வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அருகில் வந்துவிட்டதால் அதற்கும் நேரம் இருக்காது என்பதால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Tags: Asian Champions Trophyasian cup cricketINDIAN CRICKET
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி !

Next Post

தேச நலன் கருதியே ஒரே நாடு ஒரே தேர்தல்! – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். 

Related News

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies