குற்ற வழக்குகளில் ஆடியோ - வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொலை வழக்கு பிறழ் சாட்சியால் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முக்கியக் குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி – அதிலா பானு தம்பதிகளுக்கு முகமது அஸ்லம் (7) என்ற மகனும், அஜிராபானு (5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரோஸ்லின் என்பவர் கொலை வழக்கில் முக்கியச் சாட்சியான முத்துசாமி, நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி அளித்ததால் ரோஸ்லின் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர், முத்துசாமி சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கு, ரோஸ்லின் உறவினர் சாகுலுடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, முத்துசாமியின் கை விரலை சாகுல் உடைத்துள்ளார். இத்தகவலறிந்த அதிலா பானு, சாகுலை கடுமையாகத் திட்டியுள்ளார். இந்த சூழலில், கடந்த 8.11.2010 அன்று மகன், மகளுடன் அதிலா பானு கடத்தப்பட்டார்.

பின்னர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிலா பானு மற்றும் அவரது மகன், மகளின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு முதலில் மாநில காவல்துறையினர் வசமும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி, அதிலா பானு உறவினர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறினர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் கூட விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அந்தளவுக்குச் சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளனர் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 மற்றும் 164 பிரிவின் கீழ் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ – வீடியோ எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், திருத்தம் செய்யப்பட்டு, 14 ஆண்டுகளாகியும், இதை உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் கண்காணிக்காமல் உள்ளனர் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலத்தில் ஆடியோ- வீடியோ காட்சி முறையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பிறழ் சாட்சியம் தடுக்கப்படும். ஆகவே, முக்கிய வழக்குகளில் 161 வாக்குமூலங்களை ஆடியோ- வீடியோ முறையில் பதிவு செய்ய வேண்டும் என உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டனர்.

Tags: Madurai high courtOrderDGPHome secretaryAudio Video Statementwitness
ShareTweetSendShare
Previous Post

மொராக்கோ நிலநடுக்கம்: பலி 2,000!

Next Post

நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies