காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!
Jul 27, 2025, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கியது.

சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் தனியார் பேருந்துகள் மற்றும் அட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திங்கள் கிழமை அன்று நடைபெற்ற பந்த் காரணமாக, அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தமிழகத்திலிருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூர் நோக்கி தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பேருந்து இயக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் பணி மணிக்குச் சொந்தமான நான்கு அரசு பேருந்துகள் மீது பெங்களூர் மைசூர் சதுக்கம் அருகே மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

இந்த தாக்குதலில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் உயிர் சேதமுமோ அல்லது படுகாயமோ ஏற்படவில்லை.

இது தொடர்பாக, பேருந்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் அலட்சியமே, தமிழக பேருந்துகள் தாக்கப்படக் முக்கிய காரணம் என்றும், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு கர்நாடக காவல்துறை உரிய முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

Tags: karnatakagovt bus
ShareTweetSendShare
Previous Post

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Next Post

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies