அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!
Jul 29, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆறு செல்லும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு குவாரி செயல்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இதன் மூலம், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாகவும், அரசு நிர்ணயித்த ஆழத்தைவிட, கூடுதல் ஆழம் மணல் எடுத்ததாக, மணல் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், இன்றும் சோதனை தொடர்கிறது. இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் சேமிப்புக் கிடங்கில் உள்ள அலுவலகத்தில் 2 -வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது, கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதா?, எவ்வளவு மணல் கிடங்கில் உள்ளது? எவ்வளவு மணல் ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.

மணல் குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே, மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலர்களில் சோதனை தொடர்ந்து வரும் நிலையில், அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு அமைச்சர், மற்றும் டெல்டா மாவட்டம் தொடர்புடைய ஒரு அமைச்சர், திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், முக்கிய கட்சி நிர்வாகிகள் சிலர், மற்றும் கனிம வளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Next Post

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies