தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Jul 26, 2025, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பத்தில் தொடர்புடைய பலரையும் என்.ஐ.ஏ. கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அவ்வப்போது தமிழகத்தில் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு, ரசாலிபுரம் தெருவைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வீட்டுக்குள் நுழைந்தது. இன்ஜினீயரான இவர், சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்ததாகவும், அதனடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல, கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக தேசிய புலனாய்வு முகாமைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளை குறிவைத்து  என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் ஜி.எம்.நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உட்பட 22 இடங்களிலும், சென்னையில் திரு.வி.க. நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீடு உட்பட மொத்தம் 30 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது.

Tags: Raid30 placesTamil NaduNia
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!

Next Post

வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்ரபாணி – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Related News

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சி காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies