பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!
Apr 29, 2026, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!

ஜம்மு காஷ்மீரில் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் எதிரொலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கை குழு மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்தி வரும் பரிவர்தன் யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு இரு தரப்புப் போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல், ஊடுருவல் சம்பவங்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, அதனுடன் கிரிக்கெட் உறவை தொடங்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைபெற்று வரும் 2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்தியா விளையாட வேண்டிய போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012 – 2013 காலகட்டத்தில் இரு தரப்பு போட்டியில் விளையாடியது. இதன் பிறகு, இரு நாடுகளும் ஐ.சி.சி. போட்டிகளிலும் மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியது. கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணிற்கே சென்று இந்தியா இரு தரப்பு தொடரில் விளையாடியது. இதுவே இந்தியா முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanWill not playAnurag ThakurCricketIndia
ShareTweetSendShare
Previous Post

தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டமே விஸ்வகர்மா திட்டம் !– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 

Next Post

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies