பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!

ஜம்மு காஷ்மீரில் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் எதிரொலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கை குழு மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்தி வரும் பரிவர்தன் யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு இரு தரப்புப் போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல், ஊடுருவல் சம்பவங்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, அதனுடன் கிரிக்கெட் உறவை தொடங்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைபெற்று வரும் 2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்தியா விளையாட வேண்டிய போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012 – 2013 காலகட்டத்தில் இரு தரப்பு போட்டியில் விளையாடியது. இதன் பிறகு, இரு நாடுகளும் ஐ.சி.சி. போட்டிகளிலும் மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியது. கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணிற்கே சென்று இந்தியா இரு தரப்பு தொடரில் விளையாடியது. இதுவே இந்தியா முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Anurag ThakurCricketIndiapakistanWill not play
Share
Tweet
SendShare
Previous Post

தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டமே விஸ்வகர்மா திட்டம் !– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 

Next Post

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies