பிரதமர் பதவி காலியாக இல்லை: அமித்ஷா பதிலடி!
Feb 6, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் பதவி காலியாக இல்லை: அமித்ஷா பதிலடி!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 லட்சம் கோடி ஊழல் எனவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 08:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு, 12 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, தற்போது “இண்டியா” கூட்டணி என்கிற புதிய பெயரில் வந்திருக்கிறார்கள். பிரதமர் பதவி ஒன்றும் காலியாக இல்லை. அப்பதவியில் மோடியே மீண்டும் அமர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுப்பது, பிரசாரம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் “லோக் சபா பிரவஸ்” எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், உள்துறை அமைச்சரான அமித்ஷா, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் “லோக் சபா பிரவஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜஞ்சர்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “இண்டியா கூட்டணி சுயநலம் வாய்ந்தது. லாலு யாதவ் தன்னுடைய மகனை பீகார் முதல்வராக்க வேண்டும் என்று விரும்புகிறார். நிதீஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், இதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால், பிரதமர் பதவி காலியாக இல்லை. அப்பதவியில் மோடிதான் மீண்டும் அமரப் போகிறார்.

இந்தக் கூட்டணி பீகாரை திரும்பவும் காட்டாட்சிக்கு கொண்டு செல்கிறது. திருப்திப்படுத்துவதன் வழியாக, அதுபோன்ற சக்திகளிடம் அவர்கள் பீகாரை ஒப்படைக்கப் பார்க்கிறார்கள். இதனால் பீகார் பாதுகாப்பு பெறாது. மேலும், எதிர்கட்சிகள் புதிய பெயருடன் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றனர்.

இரயில்வே அமைச்சராக இருந்தபோது, லாலு யாதவ் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, அதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரை வைத்துக் கொண்டு மீண்டும் தேர்தலை சந்திக்க முடியாது. இதன் காரணமாகவே, பெயரை மாற்றி புதிய பெயரில் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும், இக்கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்.

ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: I.N.D.I.A. allaianceBiharscamAmitsha12 lack croresNew allaiance
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி பிறந்தநாள்: ஆயுஷ் பூஜை, கோ தானம்!

Next Post

செய்தித் தொகுப்பாளர்கள் புறக்கணிப்பு “எமர்ஜென்ஸி 2.0”: “இண்டியா” கூட்டணிக்கு பா.ஜ.க. கண்டனம்!

Related News

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – கார்கேவுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

மும்பை-புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து

ரூ.30 லட்சம் லஞ்சம் – கண்காணிப்பு பொறியாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலாப்பயணிகளுக்கான ராட்சத பலூன் திட்டம் – காற்றின் வேகம் அதிகரித்ததால் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்!

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் சீர்வரிசையை கண்டு வியந்து போன ஊர் மக்கள்!

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை! – வெளியான காரணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies