பிரதமர் பதவி காலியாக இல்லை: அமித்ஷா பதிலடி!
Jun 23, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் பதவி காலியாக இல்லை: அமித்ஷா பதிலடி!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 லட்சம் கோடி ஊழல் எனவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 08:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு, 12 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, தற்போது “இண்டியா” கூட்டணி என்கிற புதிய பெயரில் வந்திருக்கிறார்கள். பிரதமர் பதவி ஒன்றும் காலியாக இல்லை. அப்பதவியில் மோடியே மீண்டும் அமர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுப்பது, பிரசாரம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் “லோக் சபா பிரவஸ்” எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், உள்துறை அமைச்சரான அமித்ஷா, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் “லோக் சபா பிரவஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜஞ்சர்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “இண்டியா கூட்டணி சுயநலம் வாய்ந்தது. லாலு யாதவ் தன்னுடைய மகனை பீகார் முதல்வராக்க வேண்டும் என்று விரும்புகிறார். நிதீஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், இதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால், பிரதமர் பதவி காலியாக இல்லை. அப்பதவியில் மோடிதான் மீண்டும் அமரப் போகிறார்.

இந்தக் கூட்டணி பீகாரை திரும்பவும் காட்டாட்சிக்கு கொண்டு செல்கிறது. திருப்திப்படுத்துவதன் வழியாக, அதுபோன்ற சக்திகளிடம் அவர்கள் பீகாரை ஒப்படைக்கப் பார்க்கிறார்கள். இதனால் பீகார் பாதுகாப்பு பெறாது. மேலும், எதிர்கட்சிகள் புதிய பெயருடன் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றனர்.

இரயில்வே அமைச்சராக இருந்தபோது, லாலு யாதவ் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, அதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரை வைத்துக் கொண்டு மீண்டும் தேர்தலை சந்திக்க முடியாது. இதன் காரணமாகவே, பெயரை மாற்றி புதிய பெயரில் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும், இக்கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்.

ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: I.N.D.I.A. allaianceBiharscamAmitsha12 lack croresNew allaiance
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி பிறந்தநாள்: ஆயுஷ் பூஜை, கோ தானம்!

Next Post

செய்தித் தொகுப்பாளர்கள் புறக்கணிப்பு “எமர்ஜென்ஸி 2.0”: “இண்டியா” கூட்டணிக்கு பா.ஜ.க. கண்டனம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies