சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பாரத நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இது துரதிர்ஷ்டவசமானது, சனாதன தர்மம் நிரந்தரமானது, உலகில் உள்ள எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் .
“இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது… சனாதன தர்மம் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற செய்தியை அளித்துள்ளது, அதாவது உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்” என்று ராஜ்ந்த் சிங் விளக்கியுள்ளார்.
நம் தாய்மார்கள், சகோதரிகள் மாவை பிசையும் போது, அருகில் எறும்பு சென்றால், ஒரு சிறிய அளவு மாவுப் பகுதியை சாப்பிடக் கொடுங்கள் என்பது தான் சனாதன தர்மம். என்றும் நிரந்தரமா அந்த சனாதனத்தை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, ”என்று அவர் கூறியுள்ளார். .