நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!
Aug 8, 2025, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

இஸ்ரோ லோகோவும் பதிவாகாததற்கு மண்ணின் தன்மையை காரணம்!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதன் பிறகு, தரையிறங்கிய இடத்தில் இருந்தே லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வு செய்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால் சிவசக்தி புள்ளியில் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், மீண்டும் பகல் தொடங்கிய, கடந்த 22-ம் தேதி விக்ரம் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. எனினும், சிக்னலை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. அதேசமயம், அது வராது என்றும் என்னால் கூற முடியாது. நாம் காத்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும். அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். அதேபோல, நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முத்திரைகள் நிலவின் மேற்பரப்பில் பதியவில்லை.

இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவில் மண் தூசியாக இல்லாமல் திடமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தென்துருவப் பகுதியிலுள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. அதேபோல, நிலவில் தண்ணீரை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ISROChandrayan 3vikram landerRoverNew information
ShareTweetSendShare
Previous Post

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

Next Post

‘ஐ2யு2’ இணையதளம் தொடக்கம்

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies