நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

இஸ்ரோ லோகோவும் பதிவாகாததற்கு மண்ணின் தன்மையை காரணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதன் பிறகு, தரையிறங்கிய இடத்தில் இருந்தே லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வு செய்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால் சிவசக்தி புள்ளியில் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், மீண்டும் பகல் தொடங்கிய, கடந்த 22-ம் தேதி விக்ரம் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. எனினும், சிக்னலை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. அதேசமயம், அது வராது என்றும் என்னால் கூற முடியாது. நாம் காத்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும். அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். அதேபோல, நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முத்திரைகள் நிலவின் மேற்பரப்பில் பதியவில்லை.

இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவில் மண் தூசியாக இல்லாமல் திடமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தென்துருவப் பகுதியிலுள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. அதேபோல, நிலவில் தண்ணீரை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ISROChandrayan 3vikram landerRoverNew information
ShareTweetSendShare
Previous Post

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

Next Post

‘ஐ2யு2’ இணையதளம் தொடக்கம்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies