காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இதுகுறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் வந்தது. இதையடுத்து, அம்மாநில நிர்வாகிகள், ஜி.எம்.மிர், டாக்டர் அலி முகமது மிர், அல்தாப் தாக்கூர், ஆசிப் மசூதி, ஆரிப் ராஜா, அன்வர் கான், மன்சூர் பட் மற்றும் பிலால் பார்ரே ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு முறைக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த நோட்டீஸில், “ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. துணைத் தலைவர் சோபி யூசுப் மீது ஒழுக்காற்றுக் குழு விசாரணை நடத்தியபோது, ​இந்த விவகாரம் ஒழுங்குமுறைக் குழுவின் கவனத்திற்கு வந்தது. கட்சியில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளும், ஒழுக்கமின்மைக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

கட்சியில் உங்களது பதவி மற்றும் உங்களின் கடந்தகால பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் பாதகமான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒழுக்காற்றுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்தும், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவீர்கள்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இன்று முதல் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவருக்கு விளக்கத்தை அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே அனுப்பப்பட்டு வருவதாகவும், தனித்தனியாக அறிவிப்பு செய்யப்பட இயலாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக சுனில் சேத்தியும், குழுவின் உறுப்பினர்களாக அசீம் குப்தா மற்றும் ரேகா மகாஜனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpjammu kashmirIssueNotice
ShareTweetSendShare
Previous Post

என்எல்சி – மின் கொள்முதல் ஒப்பந்தம்!

Next Post

2000 ரூபாய் நோட்டை மாற்ற காலக் கெடு நீட்டிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies