காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!
Sep 12, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இதுகுறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் வந்தது. இதையடுத்து, அம்மாநில நிர்வாகிகள், ஜி.எம்.மிர், டாக்டர் அலி முகமது மிர், அல்தாப் தாக்கூர், ஆசிப் மசூதி, ஆரிப் ராஜா, அன்வர் கான், மன்சூர் பட் மற்றும் பிலால் பார்ரே ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு முறைக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த நோட்டீஸில், “ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. துணைத் தலைவர் சோபி யூசுப் மீது ஒழுக்காற்றுக் குழு விசாரணை நடத்தியபோது, ​இந்த விவகாரம் ஒழுங்குமுறைக் குழுவின் கவனத்திற்கு வந்தது. கட்சியில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளும், ஒழுக்கமின்மைக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

கட்சியில் உங்களது பதவி மற்றும் உங்களின் கடந்தகால பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் பாதகமான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒழுக்காற்றுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்தும், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவீர்கள்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இன்று முதல் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவருக்கு விளக்கத்தை அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே அனுப்பப்பட்டு வருவதாகவும், தனித்தனியாக அறிவிப்பு செய்யப்பட இயலாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக சுனில் சேத்தியும், குழுவின் உறுப்பினர்களாக அசீம் குப்தா மற்றும் ரேகா மகாஜனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpjammu kashmirIssueNotice
Share
Tweet
SendShare
Previous Post

என்எல்சி – மின் கொள்முதல் ஒப்பந்தம்!

Next Post

2000 ரூபாய் நோட்டை மாற்ற காலக் கெடு நீட்டிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies