சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!

மற்றவைகள் எல்லாம் வழிபாட்டு முறைகள் மட்டுமே!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சனாதன தர்மம் ஒன்றே மதம். மற்றவை அனைத்தும் வழிபாட்டு முறைகள் மட்டுமே என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

மஹந்த் திக் விஜய் நாத்தின் 54-வது நினைவு தினம் மற்றும் தேசியத் துறவி மஹந்த் அவைத்ய நாத்தின் 9-வது நினைவு தினம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்நாத் கோவிலில் ‘ஸ்ரீமத் பகவத் கதா ஞான யாகம்’ கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “சனாதன தர்மம் மட்டுமே மதம். மற்ற அனைத்துப் பிரிவுகளும் வழிபாட்டு முறைகள் மட்டுமே. சனாதனம் மனித குலத்தின் மதம். அது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி ஏற்படும்” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “பகவத்தின் கதை எல்லையற்றது. குறிப்பிட்ட நாட்கள் அல்லது குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் அதை முடித்து விட முடியாது. பகவத்தின் சாரத்தை பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள்தான் ஒரு துறவியின் முன்னுரிமை. மஹந்த் திக் விஜய் நாத் அப்படிப்பட்ட ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களை எதிர்த்துப் போராடினார்.

மஹந்த் திக் விஜய் நாத் ராஜஸ்தானின் மேவாரில் உள்ள ராணா குலத்தைச் சேர்ந்தவர். நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும்போது தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சமய மற்றும் அரசியல் சடங்குகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கு புதிதாக ஏதாவது செய்ய முயன்றார். மஹந்த் திக் விஜய் நாத், கோரக்ஷ்பீத்தில் சேர்ந்த பிறகு, முதலில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மகாராணா பிரதாப் கல்வி கவுன்சிலை நிறுவினார்.

இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய உணர்வை தூண்டுவதற்காக, அவர் தனது நிறுவனங்களை விரிவுபடுத்தினார். அவரால் நிறுவப்பட்ட கல்விக் கவுன்சில் ஒரு பல்கலைக்கழகத்தையே நிறுவி இருக்கிறது. தவிர, 48 கல்விப் பயிற்சி நிறுவனங்களை நிறுவி, நாடு மற்றும் சமூகம் தொடர்பான சவால்களைச் சமாளிக்க இளம் தலைமுறையினரை தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

Tags: only religionuttar pradeshYogi Adityanathsanatana dharma
ShareTweetSendShare
Previous Post

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Next Post

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies