சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!
Oct 25, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!

மற்றவைகள் எல்லாம் வழிபாட்டு முறைகள் மட்டுமே!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சனாதன தர்மம் ஒன்றே மதம். மற்றவை அனைத்தும் வழிபாட்டு முறைகள் மட்டுமே என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

மஹந்த் திக் விஜய் நாத்தின் 54-வது நினைவு தினம் மற்றும் தேசியத் துறவி மஹந்த் அவைத்ய நாத்தின் 9-வது நினைவு தினம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்நாத் கோவிலில் ‘ஸ்ரீமத் பகவத் கதா ஞான யாகம்’ கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “சனாதன தர்மம் மட்டுமே மதம். மற்ற அனைத்துப் பிரிவுகளும் வழிபாட்டு முறைகள் மட்டுமே. சனாதனம் மனித குலத்தின் மதம். அது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி ஏற்படும்” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “பகவத்தின் கதை எல்லையற்றது. குறிப்பிட்ட நாட்கள் அல்லது குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் அதை முடித்து விட முடியாது. பகவத்தின் சாரத்தை பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள்தான் ஒரு துறவியின் முன்னுரிமை. மஹந்த் திக் விஜய் நாத் அப்படிப்பட்ட ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களை எதிர்த்துப் போராடினார்.

மஹந்த் திக் விஜய் நாத் ராஜஸ்தானின் மேவாரில் உள்ள ராணா குலத்தைச் சேர்ந்தவர். நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும்போது தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சமய மற்றும் அரசியல் சடங்குகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கு புதிதாக ஏதாவது செய்ய முயன்றார். மஹந்த் திக் விஜய் நாத், கோரக்ஷ்பீத்தில் சேர்ந்த பிறகு, முதலில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மகாராணா பிரதாப் கல்வி கவுன்சிலை நிறுவினார்.

இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய உணர்வை தூண்டுவதற்காக, அவர் தனது நிறுவனங்களை விரிவுபடுத்தினார். அவரால் நிறுவப்பட்ட கல்விக் கவுன்சில் ஒரு பல்கலைக்கழகத்தையே நிறுவி இருக்கிறது. தவிர, 48 கல்விப் பயிற்சி நிறுவனங்களை நிறுவி, நாடு மற்றும் சமூகம் தொடர்பான சவால்களைச் சமாளிக்க இளம் தலைமுறையினரை தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

Tags: uttar pradeshYogi Adityanathsanatana dharmaonly religion
ShareTweetSendShare
Previous Post

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Next Post

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies