சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

16 சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரனுக்கு, குறைந்தபட்சம் 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோஸ்டா மேஸா பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி. இவர், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சில வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார்.

மேத்யூ தன்னை அசல் குழந்தை பராமரிப்பாளர் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். மேலும், குழந்தைகளுக்கு சிறந்த ஆலோசனை வழங்குபவராகவும், நல்ல சகோதரனாக இருப்பதாகவும், விடுமுறைக் காலங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகவும் மேத்யூ தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இதனால், அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பலர், மேத்யூவைக் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் அமர்த்தினர்.

அமெரிக்காவில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லகுனா பீச் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சி செய்ததாக புகாரளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, மேத்யூ இதற்கு முன்பு பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விசாரணையைத் தீவிரமாக்கிய காவல்துறை, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனிடமும், தெற்கு கலிபோர்னியாவில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் மேத்யூ தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை, மேத்யூ 16-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுவர்கள் அளித்த சாட்சியின் பேரில், ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில், அந்நாட்டு ஜூரி அமைப்பு மேத்யூ செய்த குற்றத்தை உறுதி செய்தது. இதன் காரணமாக, மேத்தாவுக்குக் குறைந்தபட்சம் 690 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Tags: Arrest
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்

Next Post

மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies