மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!
Sep 5, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!

ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 03:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர மோடி, “மோடி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சியின் நிர்வாகிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இது அரசு திட்டம். ஆனால், மாநில முதல்வர் வரவில்லை. அவர் ஏன் வரவில்லை? மோடி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

நான் அவரிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஓய்வெடுங்கள், எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று ஜோத்பூர் மக்கள் ஒரே நேரத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கின்றனர். நான் ஏற்கெனவே டெல்லியில் இருந்து ஒரு சிறப்புப் பரிசுடன் தயாராக வந்திருக்கிறேன். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு எரிவாயு உருளை வழங்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.

அதன்படி, ரக்ஷா பந்தனின்போது சமையல் எரிவாயு உருளைக்கு 400 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது நவராத்திரி, தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இது சமையலை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான எங்களின் முயற்சியாகும். மேலும், உங்கள் ஆரோக்கியமே எங்களின் முன்னுரிமை. ஒரு பக்கம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை வசதிகளை வழங்குகிறோம். மறுபுறம், நவீன மருத்துவமனைகளை சாதனை எண்ணிக்கையில் கட்டி வருகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கிறது. இதை யாரால் செய்ய முடியும்? மோடியால் மட்டுமே செய்ய முடியாது. உங்கள் வாக்குகளால்தான் அதைச் செய்ய முடியும். உங்கள் வாக்கு பலத்தால் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். மேலும், சுற்றுலாவில் முதல் மாநிலமாக மாறும்” என்றார்.

Tags: PM ModiRajasthanprojects5000 croreUnveil
Share
Tweet
SendShare
Previous Post

சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!

Next Post

தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி!- அண்ணாமலை.

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies