சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!
Jul 20, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

16 சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரனுக்கு, குறைந்தபட்சம் 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோஸ்டா மேஸா பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி. இவர், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சில வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார்.

மேத்யூ தன்னை அசல் குழந்தை பராமரிப்பாளர் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். மேலும், குழந்தைகளுக்கு சிறந்த ஆலோசனை வழங்குபவராகவும், நல்ல சகோதரனாக இருப்பதாகவும், விடுமுறைக் காலங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகவும் மேத்யூ தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இதனால், அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பலர், மேத்யூவைக் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் அமர்த்தினர்.

அமெரிக்காவில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லகுனா பீச் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சி செய்ததாக புகாரளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, மேத்யூ இதற்கு முன்பு பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விசாரணையைத் தீவிரமாக்கிய காவல்துறை, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனிடமும், தெற்கு கலிபோர்னியாவில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் மேத்யூ தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை, மேத்யூ 16-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுவர்கள் அளித்த சாட்சியின் பேரில், ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில், அந்நாட்டு ஜூரி அமைப்பு மேத்யூ செய்த குற்றத்தை உறுதி செய்தது. இதன் காரணமாக, மேத்தாவுக்குக் குறைந்தபட்சம் 690 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Tags: Arrest
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்

Next Post

மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies