ராஜஸ்தானில் ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

2 புதிய இரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 புதிய இரயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 2-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சூழலில், இன்று மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் செய்தவர், சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேலும், 2 புதிய இரயில்களுக்கான சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதில், ஜெய்சால்மர் – டெல்லியை இணைக்கும் புதிய இரயிலான ருனிச்சா எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வார் சந்திப்பு – காம்ப்ளி காட் ஆகியவற்றை இணைக்கும் புதிய பாரம்பரிய இரயில் ஆகியவை அடங்கும். இது தவிர, மேலும் 2 ரயில் திட்டங்களும் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில், 145 கி.மீ. நீளமுள்ள ‘தேகானா-ராய் கா பாக்’ இரயில் பாதை மற்றும் 58 கி.மீ. நீளமுள்ள ‘தேகானா-குச்சமன் சிட்டி’ இரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும்.

மேலும், ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 350 படுக்கைகள் கொண்ட ‘அவசர மற்றும் தீவிர சிகிச்சை மையம்’ மற்றும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 7 தீவிர சிகிச்சை மையங்களையும் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.

அதேபோல, ஜோத்பூர் விமான நிலையத்தில் மொத்தம் 480 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் அதிநவீன புதிய டெர்மினல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனம் 1,135 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அதிநவீன வளாகமாகக் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘மத்திய கருவி ஆய்வகம்’, பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் ‘யோகா மற்றும் விளையாட்டு அறிவியல் கட்டடம்’ ஆகியவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம், 600 மாணவர்கள் தங்கும் வகையிலான விடுதிக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதுதவிர, பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 1,475 கோடி ரூபாய் செலவில் சாலைத் திட்டங்கள் கட்டப்படுகிறது. இதில், ஜோத்பூர் ரிங் ரோடு போக்குவரத்து அழுத்தத்தைக் குறைக்கவும், நகரத்தில் வாகன மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.

Tags: PM ModitrainRajasthanlays foundationRoad
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு!

Next Post

குன்னூர்: ரேஷன் கடையில் புகுந்து கரடிகள் அட்டகாசம்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies