ராஜஸ்தானில் ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

2 புதிய இரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 06:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 புதிய இரயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 2-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சூழலில், இன்று மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் செய்தவர், சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேலும், 2 புதிய இரயில்களுக்கான சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதில், ஜெய்சால்மர் – டெல்லியை இணைக்கும் புதிய இரயிலான ருனிச்சா எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வார் சந்திப்பு – காம்ப்ளி காட் ஆகியவற்றை இணைக்கும் புதிய பாரம்பரிய இரயில் ஆகியவை அடங்கும். இது தவிர, மேலும் 2 ரயில் திட்டங்களும் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில், 145 கி.மீ. நீளமுள்ள ‘தேகானா-ராய் கா பாக்’ இரயில் பாதை மற்றும் 58 கி.மீ. நீளமுள்ள ‘தேகானா-குச்சமன் சிட்டி’ இரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும்.

மேலும், ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 350 படுக்கைகள் கொண்ட ‘அவசர மற்றும் தீவிர சிகிச்சை மையம்’ மற்றும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 7 தீவிர சிகிச்சை மையங்களையும் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.

அதேபோல, ஜோத்பூர் விமான நிலையத்தில் மொத்தம் 480 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் அதிநவீன புதிய டெர்மினல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனம் 1,135 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அதிநவீன வளாகமாகக் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘மத்திய கருவி ஆய்வகம்’, பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் ‘யோகா மற்றும் விளையாட்டு அறிவியல் கட்டடம்’ ஆகியவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம், 600 மாணவர்கள் தங்கும் வகையிலான விடுதிக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதுதவிர, பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 1,475 கோடி ரூபாய் செலவில் சாலைத் திட்டங்கள் கட்டப்படுகிறது. இதில், ஜோத்பூர் ரிங் ரோடு போக்குவரத்து அழுத்தத்தைக் குறைக்கவும், நகரத்தில் வாகன மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.

Tags: PM ModitrainRajasthanlays foundationRoad
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு!

Next Post

குன்னூர்: ரேஷன் கடையில் புகுந்து கரடிகள் அட்டகாசம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies