குன்னூர்: ரேஷன் கடையில் புகுந்து கரடிகள் அட்டகாசம்!
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குன்னூர்: ரேஷன் கடையில் புகுந்து கரடிகள் அட்டகாசம்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள், அங்கிருந்த ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் உணவு தேடிக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகி விட்டது. குறிப்பாக, கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. வன விலங்குகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு சென்று விடுகின்றன.

குன்னூர் அருகே முத்தநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வந்த கரடிகள், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்தன. பின்னர், அங்கிருந்த உணவுப் பொருட்களைத் தின்று சூறையாடி விட்டுச் சென்றன. நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதை அடுத்து அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த, இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்குப் பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர்.

Tags: Bears break into the ration shopbears
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

Next Post

சொத்துக்குவிப்பு வழக்கு: திமுக மாஜி அமைச்சர் குடும்பத்திற்கு சிறை – முழு விவரம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies