ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

ஒரு குடும்பத்தால் மட்டும் நாடு முன்னேற்றம் அடையவில்லை என்றும் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா மத்திய அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘வீராங்கனை ராணி துர்காவதி ஸ்மாரக் அவுர் உதயன்’ என்கிற திட்டத்தின் மூலம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ராணி துர்காவதி போன்ற வீராங்கனைகள் எந்த நாட்டில் இருந்திருந்தாலும், அவர்கள் அவரது பெருமையை உலகம் முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, நமது மாவீரர்கள், நமது தலைவர்கள் மறக்கப்பட்டனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் ராணி துர்காவதி ஸ்மாரக் பூமிபூஜை செய்தோம். ஒருவரின் பிறந்த இடத்திற்கு உழைக்க, அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நூற்றாண்டு விழாவில், ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்திற்கும், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும், நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த கட்சியினர், ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்தார்கள். அது ஒரு குடும்பத்திற்கான வழிபாடு. ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை. மாநிலத்தில் இன்று 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

இது தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் 4 வழிச் சாலை திட்டங்கள். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும். இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதோடு, இத்திட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 கோடி பேரின் போலிப் பெயர்களை நீக்கி விட்டோம். இந்த 11 கோடி போலிப் பெயர்கள் ஏழைகளின் பங்கைப் பறிக்கின்றன. தற்போது உஜ்வாலா பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும். மேலும், சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயு குழாய்கள் மூலம் மலிவான எரிவாயுவை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

Tags: PM ModiMadya Pradeshprojectslays foundation12000 crore
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் – அண்ணாமலை!

Next Post

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies