ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!
Jul 26, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

ஒரு குடும்பத்தால் மட்டும் நாடு முன்னேற்றம் அடையவில்லை என்றும் தாக்குதல்!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா மத்திய அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘வீராங்கனை ராணி துர்காவதி ஸ்மாரக் அவுர் உதயன்’ என்கிற திட்டத்தின் மூலம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ராணி துர்காவதி போன்ற வீராங்கனைகள் எந்த நாட்டில் இருந்திருந்தாலும், அவர்கள் அவரது பெருமையை உலகம் முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, நமது மாவீரர்கள், நமது தலைவர்கள் மறக்கப்பட்டனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் ராணி துர்காவதி ஸ்மாரக் பூமிபூஜை செய்தோம். ஒருவரின் பிறந்த இடத்திற்கு உழைக்க, அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நூற்றாண்டு விழாவில், ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்திற்கும், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும், நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த கட்சியினர், ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்தார்கள். அது ஒரு குடும்பத்திற்கான வழிபாடு. ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை. மாநிலத்தில் இன்று 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

இது தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் 4 வழிச் சாலை திட்டங்கள். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும். இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதோடு, இத்திட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 கோடி பேரின் போலிப் பெயர்களை நீக்கி விட்டோம். இந்த 11 கோடி போலிப் பெயர்கள் ஏழைகளின் பங்கைப் பறிக்கின்றன. தற்போது உஜ்வாலா பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும். மேலும், சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயு குழாய்கள் மூலம் மலிவான எரிவாயுவை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

Tags: projectslays foundation12000 crorePM ModiMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் – அண்ணாமலை!

Next Post

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies