ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!
Apr 29, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

ஒரு குடும்பத்தால் மட்டும் நாடு முன்னேற்றம் அடையவில்லை என்றும் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா மத்திய அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘வீராங்கனை ராணி துர்காவதி ஸ்மாரக் அவுர் உதயன்’ என்கிற திட்டத்தின் மூலம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ராணி துர்காவதி போன்ற வீராங்கனைகள் எந்த நாட்டில் இருந்திருந்தாலும், அவர்கள் அவரது பெருமையை உலகம் முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, நமது மாவீரர்கள், நமது தலைவர்கள் மறக்கப்பட்டனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் ராணி துர்காவதி ஸ்மாரக் பூமிபூஜை செய்தோம். ஒருவரின் பிறந்த இடத்திற்கு உழைக்க, அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நூற்றாண்டு விழாவில், ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்திற்கும், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும், நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த கட்சியினர், ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்தார்கள். அது ஒரு குடும்பத்திற்கான வழிபாடு. ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை. மாநிலத்தில் இன்று 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

இது தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் 4 வழிச் சாலை திட்டங்கள். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும். இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதோடு, இத்திட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 கோடி பேரின் போலிப் பெயர்களை நீக்கி விட்டோம். இந்த 11 கோடி போலிப் பெயர்கள் ஏழைகளின் பங்கைப் பறிக்கின்றன. தற்போது உஜ்வாலா பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும். மேலும், சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயு குழாய்கள் மூலம் மலிவான எரிவாயுவை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

Tags: 12000 crorePM ModiMadya Pradeshprojectslays foundation
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் – அண்ணாமலை!

Next Post

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies