ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!
Jun 14, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

ஒரு குடும்பத்தால் மட்டும் நாடு முன்னேற்றம் அடையவில்லை என்றும் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா மத்திய அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘வீராங்கனை ராணி துர்காவதி ஸ்மாரக் அவுர் உதயன்’ என்கிற திட்டத்தின் மூலம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ராணி துர்காவதி போன்ற வீராங்கனைகள் எந்த நாட்டில் இருந்திருந்தாலும், அவர்கள் அவரது பெருமையை உலகம் முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, நமது மாவீரர்கள், நமது தலைவர்கள் மறக்கப்பட்டனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் ராணி துர்காவதி ஸ்மாரக் பூமிபூஜை செய்தோம். ஒருவரின் பிறந்த இடத்திற்கு உழைக்க, அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நூற்றாண்டு விழாவில், ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்திற்கும், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும், நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த கட்சியினர், ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்தார்கள். அது ஒரு குடும்பத்திற்கான வழிபாடு. ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை. மாநிலத்தில் இன்று 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

இது தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் 4 வழிச் சாலை திட்டங்கள். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும். இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதோடு, இத்திட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 கோடி பேரின் போலிப் பெயர்களை நீக்கி விட்டோம். இந்த 11 கோடி போலிப் பெயர்கள் ஏழைகளின் பங்கைப் பறிக்கின்றன. தற்போது உஜ்வாலா பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும். மேலும், சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயு குழாய்கள் மூலம் மலிவான எரிவாயுவை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

Tags: PM ModiMadya Pradeshprojectslays foundation12000 crore
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் – அண்ணாமலை!

Next Post

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies