திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் - அண்ணாமலை!
Jun 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் – அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி  விவகாரத்தில் திமுக அரசோ, எந்தக் கவலையும் இல்லாமல், தங்கள் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ தைரியமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 1970 ஆம் ஆண்டுகளில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சியில் ஏற்பட்ட காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை, 2018 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு மாநிலங்களுக்கிடையே, எந்தப் பிரச்சினையும் எழாமல், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடக் கூறியும், கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடக மாநிலம் கட்டியுள்ள அணைகள் அனைத்திலும், மொத்தக் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருக்கையில், மேட்டூர் அணையில், வெறும் 30 சதவீதம் கொள்ளளவே தண்ணீர் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் நிச்சயம் பாதிக்கப்படும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், திமுக அரசோ, இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், தங்கள் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ தைரியமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையைத் தூர்வாரினால், சுமார் 30 டிஎம்சி கொள்ளளவு அதிகமாக அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றும், அதற்கு 3000 கோடி நிதி தேவைப்படும் என்றும், தமிழக அரசின் நீர்வளத்துறை பரிந்துரை செய்த திட்டத்தை, நிதி இல்லை என்று நிராகரித்திருக்கிறது திமுக அரசு. மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு திட்டமாக மேட்டூர் அணையைத் தூர்வாரும் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்திருந்தால், விவசாயிகள் பலனடைந்திருப்பார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பு அணைகள் கட்டுவோம் என்று முதல் நிதிநிலை அறிக்கையில் கூறினார்கள். இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது. எத்தனை தடுப்பு அணைகள் கட்டியுள்ளார்கள்? கடந்த ஆண்டு மட்டுமே காவிரியில் வந்த தண்ணீரில் 60% தண்ணீர் யாருக்கும் பலனில்லாமல், கடலில் வீணாகச் சென்று கலந்தது.

தடுப்பு அணைகள் கட்டியிருந்தால், அந்த தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தியிருக்க முடியும். காவிரி நதி, தண்ணீர் இல்லாமல் வறண்டு போனால், மணல் கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தவிர விவசாயத்தைக் குறித்தும், டெல்டா பகுதிகள் குறித்தும் திமுகவுக்கு எப்போதும் கவலை இருந்ததில்லை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக, ஏக்கருக்கு 30,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, தற்போது, ஒரு ஹெக்டேருக்கே 13,500 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் இந்த நிதியை, பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருக்கும் ஒழுங்காக வழங்குவார்களா என்பதும் கேள்விக்குறி.

விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், எந்த தொலைநோக்குத் திட்டங்களையும் தீட்டாமல், வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸை வலியுறுத்தி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைப் பெற வேண்டிய கடமையை உணர வேண்டும்.

Tags: DMKk annamali bjp
ShareTweetSendShare
Previous Post

53 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற இளம் வீராங்கனை !

Next Post

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies