5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Jan 14, 2026, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் மாதம் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020-ம் ஆண்டு சில எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் பிறகு, அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததால், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்துக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், கடந்த 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மையை உறுதி செய்ய 1 இடம் குறைந்த நிலையில், பகுஜன் சமாஜ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இம்மாநிலத்தில் பா.ஜ.க. 73 இடங்களைக் கைப்பற்றியது. இம்மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி முதல்கட்டமாகவும், 17-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

மிசோராம் மாநிலத்தில் முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. மீதி இடங்களில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க., பார்வர்டு பிளாக், சுயேட்சை தலா 1 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோராம் மாநிலத்திலும் மிசோ தேசிய முன்னணி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இத்தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

Tags: Election commission5 State ElectionElection Date
ShareTweetSendShare
Previous Post

போடி மெட்டு-மூணாறு சாலை: அக்டோபர் 12-ல் நிதின் கட்கரி திறப்பு!

Next Post

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies