5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Sep 10, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் மாதம் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020-ம் ஆண்டு சில எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் பிறகு, அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததால், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்துக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், கடந்த 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மையை உறுதி செய்ய 1 இடம் குறைந்த நிலையில், பகுஜன் சமாஜ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இம்மாநிலத்தில் பா.ஜ.க. 73 இடங்களைக் கைப்பற்றியது. இம்மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி முதல்கட்டமாகவும், 17-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

மிசோராம் மாநிலத்தில் முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. மீதி இடங்களில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க., பார்வர்டு பிளாக், சுயேட்சை தலா 1 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோராம் மாநிலத்திலும் மிசோ தேசிய முன்னணி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இத்தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

Tags: Election commission5 State ElectionElection Date
ShareTweetSendShare
Previous Post

போடி மெட்டு-மூணாறு சாலை: அக்டோபர் 12-ல் நிதின் கட்கரி திறப்பு!

Next Post

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies