தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் குறித்து விளக்கினார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ.க. விவசாய அணி தலைவர் நாகராஜ் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் குறித்து விளக்கினார். மேலும், மத்திய அரசு வழங்கும் திட்டங்களை மாநில அரசு வழங்குவது போல் போலியான பிம்பத்தை மாநில ஆட்சியாளர்கள் உருவாக்குவது புகார் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களில் மாநில ஆட்சியாளர்கள் பல்வேறு முறைகேடுகளை செய்கிறார்கள். குறிப்பாக, நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதாகவும், பல்வேறு முறைகேடுகளைச் செய்வதாகவும் கூறினார்.
கிஷான் அட்டை திமுக தருவது போல் போலியான பிம்பத்தை கட்டமைத்து வருகிறது. மத்திய அரசின் ஆயுள் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிறிய அளவில் பணத்தைக் கொடுத்து விட்டு, தமிழக அரசு காப்பீடு தருவது போல் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு வழங்கும் டிராக்டர்கள் தவறான நபர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இது போன்ற நிறைய குளறுபடிகள் நடைபெறுகிறது. இந்த குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், இ சேவை மையங்கள் மூலமாக மத்திய அரசு திட்டங்களை, மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.