சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!
Jun 3, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Oct 13, 2023, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கந்த சஷ்டி கவசம் முதல் முறையாக அரங்கேற்றப்பட்ட ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த நிலையில், சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் கத்தக்கொடி காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் வீடு வாங்கி கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக, ஜெபக் கூட்டங்கள் நடத்துவதும், ஒலிபெருக்கி மூலம் இந்து தெய்வங்களைச் சாத்தான் என அவமதிப்பது எனக் கடந்த 2 வருடங்களாக இதே வேலையைச் செய்து வந்துள்ளார். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை.

இந்த நிலையில், மாதம் செப்டம்பர் 17 -ம் தேதி அன்று, வெளியூரிலிருந்து மக்களைத் திரட்டி வந்து ஜெபக்கூடம் நடத்தியுள்ளார். அப்போது, வழக்கம் போல் தனது சேட்டைகளை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டம் நடந்த பகுதிக்குச் சென்ற பாஜகவினர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், கிறிஸ்துவ அமைப்பினர் வலியுறுத்தல் காரணமாகக் கொடுக்கப்பட்ட புகாரின் மீது மட்டும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்துக்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என சென்னிமலையில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சென்னிமலை முருகனைக் காப்பாற்ற வேண்டி முழக்கமிட்டனர். மேலும், திமுக அரசின் இந்து விரோத செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Tags: protestMurugan Temple
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Next Post

வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies