2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்': பிரதமர் அலுவலகம் தகவல்!
Mar 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

2040-க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் துறை சந்திரன் ஆய்வுக்கான சாலை வரைபடத்தை உருவாக்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா விண்வெளித் துறையில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க முடியுமா என்று சர்வதேச நாடுகள் சந்தேகத்தைக் கிளப்பி இருந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிக் காட்டியது.

இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, இத்திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது. அதாவது, 3 முறை ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தி, அதன்பிறகு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதன் முதல்கட்ட சோதனையை அக்டோபர் 21-ம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ககன்யான் திட்டம் குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இத்திட்டத்தின்போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்தும், புதிய இலக்கை நாம் அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “2025-ம் ஆண்டில் ககன்யான் ஏவுதலை உறுதிப்படுத்தும் வகையில், பணியின் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். மேலும், சமீபத்திய சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 மிஷன்கள் உட்பட இந்திய விண்வெளி முயற்சிகள் வெற்றியைக் கட்டி எழுப்பி இருக்கும் நிலையில், இந்தியா புதிய இலக்கை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகளை பிரதமர் உற்சாகப்படுத்தினார்.

மேலும், 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (இந்திய விண்வெளி நிலையம்) அமைக்கப்பட வேண்டும். அதேபோல, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் துறை சந்திரன் ஆய்வுக்கான சாலை வரைபடத்தை உருவாக்கும். இது, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம் (என்.ஜி.எல்.வி.), புதிய ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiISRO
ShareTweetSendShare
Previous Post

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Next Post

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies