இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - கெளதம் கம்பிர் !
Aug 6, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அந்த போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் ரசிகர்களுக்கு சிறிதளவு ஏமாற்றம் உள்ளது.

மேலும் இரு அணிகள் விளையாடிய கடந்த சில ஆட்டங்கள் ஒரு தலைப்பட்சமாக முடிவடைந்து விடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எளிதாக இந்தியாவை வென்ற நிலையில் அதன் பிறகு நடைபெற்ற பெரும்பாலானப் போட்டிகள் இந்தியா பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி விட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ” ஆதிக்கம் என்று சொல்வதை விட அடித்து நொறுக்கியது என்ற வார்த்தையை பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். முன்பெல்லாம் இந்த வார்த்தையை இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நாம் பயன்படுத்தவே மாட்டோம். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டிகளில் கண்டிப்பாக இதுபோன்ற முடிவுகள் கிடைக்கவே கிடைக்காது.

பல வருடங்களுக்கு முன்பு தான் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தான் இந்தியாவை தொடர்ந்து வீழ்த்தியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனினும் கிரிக்கெட்டுக்கு இது நிச்சயம் நல்லது கிடையாது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றாலே அதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நாம் அனைவரும் சொல்லி வருவோம். ஆனால் கடந்த சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எல்லாம் எந்த ஒரு சவாலும் இன்றி ஒரு தலைப் பட்சமாகவே முடிவடைந்து விடுகிறது.

இரு அணிகளையும் ஒப்பிட்டால் நிறைய வித்தியாசம் ஏற்படுகிறது. எந்த ஒரு கேப்டனுக்கும் பும்ரா, குல்தீப் யாதவ்போன்ற வீரர்கள் இருந்தால் அது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் அவர்கள் 20 ஓவர்களை, எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் பந்து வீசுவார்கள். அதே போன்று பும்ராவை ஷாகின் ஆப்ரிடியுடன் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பும்ரா மதியம் 2 மணிக்கு கடும் வெயிலில் பந்து வீசி, முதல் நான்கு ஓவர்கள் ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் ஷாகின் ஆப்ரிடி அப்படி இல்லை ” என்று கம்பீர் கூறியுள்ளார்.

Tags: gambhirindian cricket player
Share
Tweet
SendShare
Previous Post

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

Next Post

ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies