ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !
May 5, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா அனுப்பும் செயற்கைக்கோள்கள் மனிதக் குலத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, சந்திரயான் வெற்றிக்கு பின், இந்தியாவைக் கடந்து, உலக அளவில் நிலவை அனைவரும் திரும்பிப் பார்க்கக்கூடிய தருணமாக அமைந்தது. நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது சாதனையாகும்.

மற்ற நாடுகளைப் பின்பற்றி நாம் நிலவுக்குச் செல்லவில்லை. நிலவு சுற்றுவதைப் பின்பற்றியே நாம் செல்கிறோம். நாம் தனித்துச் செயல்படுவதால், குறைந்த செலவில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறோம்.

நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனிதனுக்கும், நிலவில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிவித்து இருக்கிறோம்.

1950 முதல் 1970 காலகட்டத்தில், பல்வேறு நாடுகளின், 100 விண்கலங்கள் நிலவிற்குச் சென்றன. மற்ற நாடுகள் பல மில்லியன் டாலர் செலவு செய்தும், நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் குறைந்த செலவில் கண்டறிந்து உள்ளோம்.

நாம் அனுப்பும் செயற்கைக்கோள், மனிதக் குலத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. பருவநிலை மாற்றம், மழை, புயல், வெயில் போன்றவற்றை முன்கூட்டியே அறிய முடிகிறது. செயற்கைக் கோள்கள், மக்களின் நலனுக்காகவே உள்ளன.

மேலும், அதிகப்படியான ஏ.டி.எம்., இயந்திரங்கள் உள்ள நாடாக நம் நாடு உள்ளது. அதற்குச் செயற்கைக்கோள்கள் உதவி புரிகின்றன. கொரோனா காலத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்குச் செயற்கைக்கோள்கள் உதவின என்று கூறினார்.

Tags: Mylswamy Annadurai Indian scientist
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Next Post

மின்சார வாகனம்: மத்திய அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies