2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்': பிரதமர் அலுவலகம் தகவல்!
Sep 21, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

2040-க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் துறை சந்திரன் ஆய்வுக்கான சாலை வரைபடத்தை உருவாக்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா விண்வெளித் துறையில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க முடியுமா என்று சர்வதேச நாடுகள் சந்தேகத்தைக் கிளப்பி இருந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிக் காட்டியது.

இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, இத்திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது. அதாவது, 3 முறை ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தி, அதன்பிறகு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதன் முதல்கட்ட சோதனையை அக்டோபர் 21-ம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ககன்யான் திட்டம் குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இத்திட்டத்தின்போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்தும், புதிய இலக்கை நாம் அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “2025-ம் ஆண்டில் ககன்யான் ஏவுதலை உறுதிப்படுத்தும் வகையில், பணியின் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். மேலும், சமீபத்திய சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 மிஷன்கள் உட்பட இந்திய விண்வெளி முயற்சிகள் வெற்றியைக் கட்டி எழுப்பி இருக்கும் நிலையில், இந்தியா புதிய இலக்கை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகளை பிரதமர் உற்சாகப்படுத்தினார்.

மேலும், 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (இந்திய விண்வெளி நிலையம்) அமைக்கப்பட வேண்டும். அதேபோல, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் துறை சந்திரன் ஆய்வுக்கான சாலை வரைபடத்தை உருவாக்கும். இது, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம் (என்.ஜி.எல்.வி.), புதிய ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiISRO
Share
Tweet
SendShare
Previous Post

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Next Post

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies