வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!
Oct 26, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார்.

நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் கட்சி என்று பா.ஜ.க. தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது.

அப்படியானால், அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?  அவர்தானே இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். அதேபோல, ராஜ்நாத்சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாரிசு அரசியல் பற்றிய சான்றிதழ் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பதாக நினைக்கிறேன். அமித்ஷாவின் மகன் என்ன செய்கிறார் என்று கேட்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காங்கிரஸ் கட்சியிடம் பதில் சொல்ல ஒன்றுமில்லை.

வாரிசு அரசியலுக்கும், சமாதான அரசியல் செய்வதற்கும் பொய் சொல்வதையும், குழப்பத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் பழகிவிட்டார்கள். காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது. அவர்கள் தரும் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை.

இது குழப்பத்தைப் பரப்புவதற்கான ஒரு வழியாகும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் ஒன்றரை ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்போது, மாநிலத்திற்கு அவர் என்ன செய்தார்? ஏழைகளின் நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

மேலும், அதானியைப் பிரதமர் மோடி பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய பிரஹலாத் படேல், “பிரதமர் மோடி அளித்த நேரடி பலன்களைப் பொதுமக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்திக்கு அடிப்படை யதார்த்தம் புரியவில்லை” என்றார்.

Tags: rahul gandhiCentral MinisterPrahalath singh patel
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இலஞ்சம் வாங்கிய புகார்: லோக்சபா குழு விசாரணை!

Next Post

ரேபிட் எக்ஸ் இரயிலைப் பிரதமர் மோடி அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!

Related News

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies