வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!
Jul 27, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார்.

நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் கட்சி என்று பா.ஜ.க. தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது.

அப்படியானால், அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?  அவர்தானே இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். அதேபோல, ராஜ்நாத்சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாரிசு அரசியல் பற்றிய சான்றிதழ் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பதாக நினைக்கிறேன். அமித்ஷாவின் மகன் என்ன செய்கிறார் என்று கேட்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காங்கிரஸ் கட்சியிடம் பதில் சொல்ல ஒன்றுமில்லை.

வாரிசு அரசியலுக்கும், சமாதான அரசியல் செய்வதற்கும் பொய் சொல்வதையும், குழப்பத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் பழகிவிட்டார்கள். காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது. அவர்கள் தரும் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை.

இது குழப்பத்தைப் பரப்புவதற்கான ஒரு வழியாகும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் ஒன்றரை ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்போது, மாநிலத்திற்கு அவர் என்ன செய்தார்? ஏழைகளின் நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

மேலும், அதானியைப் பிரதமர் மோடி பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய பிரஹலாத் படேல், “பிரதமர் மோடி அளித்த நேரடி பலன்களைப் பொதுமக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்திக்கு அடிப்படை யதார்த்தம் புரியவில்லை” என்றார்.

Tags: Prahalath singh patelrahul gandhiCentral Minister
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இலஞ்சம் வாங்கிய புகார்: லோக்சபா குழு விசாரணை!

Next Post

ரேபிட் எக்ஸ் இரயிலைப் பிரதமர் மோடி அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies