வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!
Aug 13, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார்.

நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் கட்சி என்று பா.ஜ.க. தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது.

அப்படியானால், அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?  அவர்தானே இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். அதேபோல, ராஜ்நாத்சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாரிசு அரசியல் பற்றிய சான்றிதழ் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பதாக நினைக்கிறேன். அமித்ஷாவின் மகன் என்ன செய்கிறார் என்று கேட்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காங்கிரஸ் கட்சியிடம் பதில் சொல்ல ஒன்றுமில்லை.

வாரிசு அரசியலுக்கும், சமாதான அரசியல் செய்வதற்கும் பொய் சொல்வதையும், குழப்பத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் பழகிவிட்டார்கள். காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது. அவர்கள் தரும் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை.

இது குழப்பத்தைப் பரப்புவதற்கான ஒரு வழியாகும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் ஒன்றரை ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்போது, மாநிலத்திற்கு அவர் என்ன செய்தார்? ஏழைகளின் நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

மேலும், அதானியைப் பிரதமர் மோடி பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய பிரஹலாத் படேல், “பிரதமர் மோடி அளித்த நேரடி பலன்களைப் பொதுமக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்திக்கு அடிப்படை யதார்த்தம் புரியவில்லை” என்றார்.

Tags: rahul gandhiCentral MinisterPrahalath singh patel
Share
Tweet
SendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இலஞ்சம் வாங்கிய புகார்: லோக்சபா குழு விசாரணை!

Next Post

ரேபிட் எக்ஸ் இரயிலைப் பிரதமர் மோடி அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies