2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பாரதப் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக் கோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ககன்யான் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ககன்யான் திட்டம் பற்றிய விரிவான கண்ணோட்டம் மற்றும் திட்ட அறிக்கைகள் விண்வெளித் துறை சார்பில் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தின்போது, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும். இதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் துரிதமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்.

அதேபோல, வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் நாம் பணியாற்ற வேண்டும். இந்த சாதனையை அடைய, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தின் வளர்ச்சி, புதிய ராக்கெட் ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவாகும். இச்சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இக்கூட்டத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விரிவாக எடுத்துக் கூறினார்.

Tags: meetingGaganyanScientistPM ModiISRO
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் ஆளுநருக்கு பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து மழை!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies