2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பாரதப் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக் கோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ககன்யான் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ககன்யான் திட்டம் பற்றிய விரிவான கண்ணோட்டம் மற்றும் திட்ட அறிக்கைகள் விண்வெளித் துறை சார்பில் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தின்போது, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும். இதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் துரிதமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்.

அதேபோல, வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் நாம் பணியாற்ற வேண்டும். இந்த சாதனையை அடைய, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தின் வளர்ச்சி, புதிய ராக்கெட் ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவாகும். இச்சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இக்கூட்டத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விரிவாக எடுத்துக் கூறினார்.

Tags: PM ModiISROmeetingGaganyanScientist
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் ஆளுநருக்கு பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து மழை!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies