சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!
Aug 20, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!

Web Desk by Web Desk
Oct 21, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.வினர் பீதியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இவற்றில் 3 வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இது தி.மு.க.வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பையா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன் இவர்கள் மீதான வழக்குகளின் பிடி தளர்ந்து வருகிறது. மேலும், சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறார். இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழக தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் சி.பி.ஐ. வசம் சென்றால், வழக்குகள் நேர்மையாக நடக்கும். இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, சம்பந்தப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் மட்டுமல்லாது அறிவாலய வட்டாரமும் கலக்கத்தில் இருக்கிறது.

Tags: DMKMinistersCasecbi
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு !

Next Post

அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட இஸ்ரேல் முடிவு!

Related News

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies