சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!
Jan 14, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.வினர் பீதியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இவற்றில் 3 வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இது தி.மு.க.வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பையா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன் இவர்கள் மீதான வழக்குகளின் பிடி தளர்ந்து வருகிறது. மேலும், சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறார். இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழக தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் சி.பி.ஐ. வசம் சென்றால், வழக்குகள் நேர்மையாக நடக்கும். இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, சம்பந்தப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் மட்டுமல்லாது அறிவாலய வட்டாரமும் கலக்கத்தில் இருக்கிறது.

Tags: cbiDMKMinistersCase
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு !

Next Post

அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட இஸ்ரேல் முடிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies