சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!
Sep 12, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 05:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.வினர் பீதியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இவற்றில் 3 வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இது தி.மு.க.வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பையா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன் இவர்கள் மீதான வழக்குகளின் பிடி தளர்ந்து வருகிறது. மேலும், சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறார். இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழக தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் சி.பி.ஐ. வசம் சென்றால், வழக்குகள் நேர்மையாக நடக்கும். இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, சம்பந்தப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் மட்டுமல்லாது அறிவாலய வட்டாரமும் கலக்கத்தில் இருக்கிறது.

Tags: cbiDMKMinistersCase
Share
Tweet
SendShare
Previous Post

தேஜஸ் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு !

Next Post

அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட இஸ்ரேல் முடிவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies