கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!
Oct 26, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு நேற்று மாலை சென்றார். அவரை ​​மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மேலும், பன்னோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார். பின்னர், குவாலியரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் நீண்டகால திட்டங்களுடன் நாடு எடுத்த முடிவுகள் அசாதாரணமானது. சுமைகளில் இருந்து நாட்டை விடுவித்திருக்கிறோம்.

முந்தைய அரசுகள் வெளிநாடுகளில் இருந்து செயற்கைக்கோள்களை வாங்கி வந்தன. ஆனால், தற்போது விண்வெளித் துறையை இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் பலனாக நமது இளைஞர்கள் பெரிய அளவில் யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நமது இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் நிலை இருக்கிறது.

நலத்திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவோம். இனிவரும் காலங்களில், நமது இளைஞர்கள் உறுதியுடன் பணிகளை முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமானவை. அதை நாம் எந்த விலை கொடுத்தாவது மேம்படுத்த வேண்டும்.

நாட்டின் புதிய தலைமுறையினருக்கும் இந்த நேரம் சிறப்பானதாக இருக்கும். நம்மால் நிலவுக்குச் செல்ல முடிந்திருக்கிறது. எனினும், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டும் வரை, ஒவ்வொரு குடும்பமும் நல்ல வீடு பெறும்வரை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் வரை நமது செயல்பாடுகள் குறையாது.

நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது” என்றார்.

Tags: PM ModiGwalior
ShareTweetSendShare
Previous Post

கர்பா டான்ஸ்: மாரடைப்பால் 10 பேர் உயிரிழப்பு!

Next Post

ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – முழு விவரம்

Related News

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies