கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!
Jun 15, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு நேற்று மாலை சென்றார். அவரை ​​மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மேலும், பன்னோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார். பின்னர், குவாலியரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் நீண்டகால திட்டங்களுடன் நாடு எடுத்த முடிவுகள் அசாதாரணமானது. சுமைகளில் இருந்து நாட்டை விடுவித்திருக்கிறோம்.

முந்தைய அரசுகள் வெளிநாடுகளில் இருந்து செயற்கைக்கோள்களை வாங்கி வந்தன. ஆனால், தற்போது விண்வெளித் துறையை இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் பலனாக நமது இளைஞர்கள் பெரிய அளவில் யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நமது இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் நிலை இருக்கிறது.

நலத்திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவோம். இனிவரும் காலங்களில், நமது இளைஞர்கள் உறுதியுடன் பணிகளை முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமானவை. அதை நாம் எந்த விலை கொடுத்தாவது மேம்படுத்த வேண்டும்.

நாட்டின் புதிய தலைமுறையினருக்கும் இந்த நேரம் சிறப்பானதாக இருக்கும். நம்மால் நிலவுக்குச் செல்ல முடிந்திருக்கிறது. எனினும், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டும் வரை, ஒவ்வொரு குடும்பமும் நல்ல வீடு பெறும்வரை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் வரை நமது செயல்பாடுகள் குறையாது.

நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது” என்றார்.

Tags: PM ModiGwalior
ShareTweetSendShare
Previous Post

கர்பா டான்ஸ்: மாரடைப்பால் 10 பேர் உயிரிழப்பு!

Next Post

ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – முழு விவரம்

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies