இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் இராணுவத்தின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை விடுவித்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள், தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர்.

இஸ்ரேல் மீது காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினர். இதில், 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அதேபோல, 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழித் தாக்குதல் மூலம் ஹமாஸ் தீவிரவாதத் தலைமையகம், தீவிரவாத முகாம்களை அழித்து வரும் இஸ்ரேல் இராணுவம், காலாட்படை மூலம் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் வலியுறுத்தின. இதற்கு பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். ஆனால், இஸ்ரேல் இதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. காஸா மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நாட்டின் இந்த அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். இதன் பிறகு, தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நூரிட் கூப்பர், யோச்செவ்ட் லிப்ஷிட்ஸ் ஆகிய வயதான 2 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கின்றனர். உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக மேற்கண்ட வயதான இருவரையும் விடுவித்திருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருக்கிறார்கள்.

எனினும், 18-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளையும் விடுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

Next Post

திருவண்ணாமலை அருகே அரசுப்பேருந்து, கார் விபத்து – 7 பேர் பலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies