இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
Jul 25, 2025, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் இராணுவத்தின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை விடுவித்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள், தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர்.

இஸ்ரேல் மீது காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினர். இதில், 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அதேபோல, 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழித் தாக்குதல் மூலம் ஹமாஸ் தீவிரவாதத் தலைமையகம், தீவிரவாத முகாம்களை அழித்து வரும் இஸ்ரேல் இராணுவம், காலாட்படை மூலம் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் வலியுறுத்தின. இதற்கு பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். ஆனால், இஸ்ரேல் இதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. காஸா மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நாட்டின் இந்த அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். இதன் பிறகு, தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நூரிட் கூப்பர், யோச்செவ்ட் லிப்ஷிட்ஸ் ஆகிய வயதான 2 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கின்றனர். உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக மேற்கண்ட வயதான இருவரையும் விடுவித்திருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருக்கிறார்கள்.

எனினும், 18-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளையும் விடுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: HamasWARIsrael
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

Next Post

திருவண்ணாமலை அருகே அரசுப்பேருந்து, கார் விபத்து – 7 பேர் பலி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies