இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் இராணுவத்தின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை விடுவித்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள், தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர்.

இஸ்ரேல் மீது காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினர். இதில், 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அதேபோல, 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழித் தாக்குதல் மூலம் ஹமாஸ் தீவிரவாதத் தலைமையகம், தீவிரவாத முகாம்களை அழித்து வரும் இஸ்ரேல் இராணுவம், காலாட்படை மூலம் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் வலியுறுத்தின. இதற்கு பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். ஆனால், இஸ்ரேல் இதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. காஸா மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நாட்டின் இந்த அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். இதன் பிறகு, தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நூரிட் கூப்பர், யோச்செவ்ட் லிப்ஷிட்ஸ் ஆகிய வயதான 2 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கின்றனர். உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக மேற்கண்ட வயதான இருவரையும் விடுவித்திருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருக்கிறார்கள்.

எனினும், 18-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளையும் விடுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: WARIsraelHamas
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

Next Post

திருவண்ணாமலை அருகே அரசுப்பேருந்து, கார் விபத்து – 7 பேர் பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies